உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம் 29 பேருக்கு தேசிய அடையாள அட்டை

மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம் 29 பேருக்கு தேசிய அடையாள அட்டை

கள்ளக்குறிச்சி: வடக்கனந்தல் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத் திறளிகளுக்கான சிறப்பு முகாமில், 29 பேருக்கு தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது. நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமுடன் இணைந்து மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் அந்தோணிராஜ் தலைமை தாங்கினார். அரசு எலும்பு முறிவு டாக்டர் இமாம், மனநல டாக்டர் சரஸ்வதி, கண் டாக்டர் ஹெலன், காது மூக்கு தொண்டை டாக்டர் ராஜேஸ்வரி உள்ளிட்டோர் கொண்ட மருத்துவ குழுவினர் 98 மாற்றுத்திறனாளிகளை பரிசோதித்தனர். அதில் தகுதிவாய்ந்த, 29 பேருக்கு மருத்துவ சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. 2 பேர் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டனர். 60 பேர்களுக்கு உதவி உபகரணங்கள் வேண்டி ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ