| ADDED : டிச 26, 2025 05:17 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பஞ்சமுக மஞ்சள் வாராஹி அம்மன் கோவிலில், பஞ்சமி திதியையொட்டி, சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடந்தன. மாடூர் டோல்கேட் அருகே நிறைமதி சாலையில் உள்ள பஞ்சமுக மஞ்சள் வாராஹி அம்மன் கோவிலில் அம்மனுக்கு பட்டு சார்த்தி, தங்க கவச அலங்காரத்தில் தீபாராதனை நடைபெற்றது. பெண்கள் கோவிலில் உள்ள அம்மிக்கல்லில் பச்சை விரலி மஞ்சளை அரைத்து ஜல வாராஹி அம்மனுக்கு சார்த்தி நேர்த்திக்கடன் பூஜைகளை செய்தனர். நேற்று முன்தினம் துவங்கி இரு நாட்கள் காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை நடந்த பஞ்சமி திதி பூஜையையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், தேங்காய் தீப வழிபாடு, ஊஞ்சல் உற்சவ சேவை நடைபெற்றது. பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.