உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கல்லா பெட்டி உடைத்து ரூ.25 ஆயிரம் திருட்டு

கல்லா பெட்டி உடைத்து ரூ.25 ஆயிரம் திருட்டு

கள்ளக்குறிச்சி: ஏமப்பேரில் டீ கடையில் கல்லா பெட்டியை உடைத்து பணத்தை திருடிச் செ்ன்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி அடுத்த உலகங்காத்தான் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன் மகன் சின்னதுரை, 40; இவர், ஏமப்பேர் பஸ் நிறுத்தம் அருகே டீ கடை நடத்தி வருகிறார். கடந்த 4ம் தேதி இரவு வியாபாரத்தை முடித்து கொண்டு வீடு சென்றார். மறுநாள் 5ம் தேதி காலை 6:00 மணிக்கு கடையை திறந்து பார்த்த போது, கல்லா பெட்டி உடைக்கப்பட்டு அதில் இருந்த 25 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !