உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பைக்கில் மணல் கடத்தல் : 3 பேர் மீது வழக்கு

பைக்கில் மணல் கடத்தல் : 3 பேர் மீது வழக்கு

கச்சிராயபாளையம்; கோமுகி ஆற்றில் பைக்கில் மணல் கடத்திய 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். கச்சிராயபாளையம் சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் தலைமையிலான போலீசார் நேற்று பொட்டியம் சாலையில் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த 2 பைக்குகளை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் சாக்கு பைகளில் ஆற்று மணல் கடத்திச் சென்றது தெரியவந்தது.உடன் மணல் மற்றும் 2 பைக்குகளையும் பறிமுதல் செய்து, அக்கராயபாளையம் சிங்காரவேலன், 50; வெள்ளையன், 50; சேகர், 45; ஆகிய 3 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை