உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கிரிக்கெட் அணி வீரர்கள் தேர்வு நாளை நடக்கிறது

கிரிக்கெட் அணி வீரர்கள் தேர்வு நாளை நடக்கிறது

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட கிரிக்கெட் அணி வீரர்கள் தேர்வு நாளை 11ம் தேதி நடக்கிறது.மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் லட்சுமி நாராயணன் அறிக்கை:கள்ளக்குறிச்சி மாவட்ட கிரிக்கெட் அணிக்காக 14 மற்றும் 16 வயதுக்குட்பட்டவர்களுக்கான மாவட்ட கிரிக்கெட் அணி வீரர்கள் தேர்வு இந்திலி ஆர்.கே.எஸ்., கல்லுாரி மைதானத்தில் நாளை 11ம் தேதி நடக்கிறது. காலை 8:30 மணிக்கு 14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும், மதியம் 1:00 மணிக்கு 16 வயதுக்குட்பட்டவர்களுக்கும் நடக்கிறது. தேர்வில் பங்கேற்கும் அனைத்து வீரர்களும் பிறப்பு சான்றிதழ் நகல் சமர்ப்பிக்க வேண்டும்.மேலும் விபரங்களுக்கு செந்தில்குமார் 94893 15107 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ