உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சித்தலுார் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

சித்தலுார் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

தியாகதுருகம் : சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது.உற்சவத்தையொட்டி, நேற்று முன்தினம் மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை மூலவர் பெரியநாயகி அம்மன், கருவறையில் உள்ள பிரமாண்ட புற்று, கொடிமரம், வசந்த மண்டபம், உற்சவர் அம்மன் மற்றும் ஊஞ்சல் ஆகியவற்றை இரண்டரை டன் பூக்களால் அலங்கரிக்கப்பட்டது.தொடர்ந்து சிறப்பு பூஜைக்குப்பின், திரளான பக்தர்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபட்டனர்.இரவு உற்சவர் அம்மன் வசந்த மண்டபத்தில் ஊஞ்சலில் எழுந்தருளினார்.பூசாரிகள் அம்மன் தாலாட்டு பாடல்களை பாடி, ஆராதனை செய்தனர்.சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ