உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வீடு புகுந்து பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு

வீடு புகுந்து பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே இரவில் வீட்டிற்குள் புகுந்து பெண்ணிடம் தாலி செயின் பறித்து சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.கள்ளக்குறிச்சி அடுத்த சோமநாதபுரம் காட்டுகொட்டாய் சேர்ந்த ஆறுமுகம் மனைவி மஞ்சு,23; விவசாய கூலி. இவர் நேற்று முன்தினம் இரவு தனது ஒன்றரை வயது மகன் மற்றும் மாமியாருடன் வீட்டில் படுத்து துாங்கி கொண்டிருந்தார். அப்போது, வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், 3 பேர், துாங்கி கொண்டிருந்த மஞ்சுவின் கழுத்திலிருந்த 4 சவரன் தாலி செயினை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர். வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை