உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / குரூப் - 1 தேர்வில் 1,622 பேர் ஆப்சென்ட்

குரூப் - 1 தேர்வில் 1,622 பேர் ஆப்சென்ட்

காஞ்சிபுரம்,:தமிழகம் முழுதும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக, குரூப் -1 என அழைக்கப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தொகுதி- - 1 தேர்வு நடந்தது.அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 20 தேர்வு மையங்களில், 6,150 பேர், குரூப் -- 1 தேர்வு எழுத அனுமதி அளித்தனர். இதில், 1,622 பேர் தேர்வு எழுத வரவில்லை.இரண்டு பறக்கும் படை மற்றும், 20 கண்காணிப்பு குழுவினர் குரூப் -- 1 தேர்வு மையங்களை கண்காணிக்க நியமிக்கப்பட்டு இருந்தனர்.காஞ்சிபுரம் பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, கலெக்டரின் நேர்முக உதவியாளர் யோகஜோதிஉள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை