| ADDED : ஜூன் 26, 2024 11:04 PM
காஞ்சிபுரம்:தமிழ்நாடு சீர்மரபினர் நல வாரியம் செயல்படுகிறது. இந்த வாரியத்தில் பதிவு செய்த உறுப்பினர்களுக்கு, 2008ம் ஆண்டு முதல் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.குறிப்பாக, விபத்து, இயற்கை மரணம், ஈமச்சடங்கு, கல்வி, திருமணம், மகப்பேறு, மூக்கு கண்ணாடி, முதியோர் ஓய்வூதியம் ஆகிய நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.நலத்திட்ட உதவிகள் பெறத் தகுதி வாய்ந்த சீர் மரபினர் இனத்தைச் சேர்ந்த, 18 - 60 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அமைப்பு சாரா நிறுவனங்களில் சேரவும், நில மற்ற விவசாய கூலி மற்றும் உடலுழைப்பு தொழிலாளர் இந்த வாரியத்தில் உறுப்பினராக சேரலாம்.மேலும் தகவலுக்கு காஞ்சிபுரம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்து உள்ளார்.