உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கழிவுநீர் கால்வாயில் உடைப்பு வேளிங்கப்பட்டரையில் சீர்கேடு

கழிவுநீர் கால்வாயில் உடைப்பு வேளிங்கப்பட்டரையில் சீர்கேடு

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலை, வேளிங்கப்பட்டரை பிரதான சாலையோரம் கழிவுநீர் செல்லும் கால்வாய் உள்ளது.இதில், கே.கே.நகர், வீராசாமி தெரு சந்திப்பில் கழிவுநீர் செல்லும் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு, சாலையில் நேற்று கழிவுநீர் வழிந்தோடியது.இதனால், கே.கே., நகருக்கு செல்லும் பாதசாரிகள் மற்றும் அப்பகுதியில் உள்ள கடைகளுக்கு செல்லும் வாடிக்கையாளர்கள் கழிவுநீரில் நடந்து செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டது.துர்நாற்றத்துடன் வெளியேறும் கழிவுநீரால் வேளிங்கப்பட்டரையில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது.எனவே, கழிவுநீர் கால்வாயில் ஏற்பட்ட உடைப்பை சீரமைக்க வேண்டும் என, வேளிங்கபட்டரையினர் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை