| ADDED : ஜூலை 10, 2024 12:37 AM
ஸ்ரீபெரும்புதுார்:-ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலையில் சேதமடைந்துள்ள வழிகாட்டி பலகை, அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளில் மீது விழுந்து விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் சாலையில், ஒரகடம், வல்லம், ஸ்ரீபெரும்புதுார் சிப்காட் தொழிற்பூங்காவிற்கு செல்லும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன.தவிர, ஒரகடம் சுற்றுவட்டாரத்தில் உள்ள 30க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த பள்ளி, கல்லுாரி மாணவர்கள் இந்த சாலை வழியே சென்று வருகின்றனர்.மிக முக்கியமான இந்த சாலையில், வாகன ஓட்டிகளுக்கு வழிகாட்டும் வகையில், முக்கிய சந்திப்புகளில் சாலையின் நடுவே, வழி காட்டும் அறிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.அந்த வகையில், ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் சாலையில், ஒரகடம் சந்திப்பு அருகே, நிசான் தொழிற்சாலை முன், சாலையில் நடுவே வைக்கப்பட்டுள்ள வழிகாட்டும் அறிவிப்பு பலகை, சேதமடைந்து பெயர்ந்து உள்ளது.காற்று வேகமாக வீசும் போது, அறிவிப்பு பலகை மேலும் பெயர்ந்து, நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளின் மீது விழும் அபாயம் உள்ளது. இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்து ஏற்படும் அச்சத்தில் சென்று வருகின்றனர்.எனவே, உயிர் பலி ஏற்படும் முன், சேதமடைந்துள்ள அறிவிப்பு பலகையை சீரமைக்க, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.