மேலும் செய்திகள்
நாய்கள் தொல்லையால் வாகன ஓட்டிகள் அவதி
8 hour(s) ago
தி.மு.க.,வை கண்டித்து அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
8 hour(s) ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சி, 49வது வார்டு, ஓரிக்கை, பாரதிதாசன் நகர், பிரதான சாலையில், வீட்டு உபயோக கழிவுநீர் மற்றும் மழைநீர் வெளியேறும் வகையில் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.இக்கால்வாயை மாநகராட்சி ஊழியர்கள் முறையாக பராமரிக்காததால், கால்வாயில் செடி, கொடிகள் புதர்போல மண்டியுள்ளதால், கால்வாய் என்பதற்கான அடையாளமே தெரியாமல் உள்ளது.மேலும், பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் மற்றும் மண் துகள் கழிவுகளால் கால்வாய் துார்ந்த நிலையில் உள்ளது. இதனால், கழிவுநீர் வெளியேற வழியில்லாமல், ஒரே இடத்தில் தேங்குவதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.மேலும், இப்பகுதியில் கொசுத்தொல்லையும் அதிகரித்துள்ளதால், சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, ஓரிக்கை பாரதிதாசன் நகர் பிரதான சாலையோரம் உள்ள கால்வாயில் மண்டியுள்ள செடி, கொடிகளையும், குப்பை குவியலை முழுமையாக அகற்றி, கழிவுநீர் தடையின்றி செல்ல வழி ஏற்படுத்த வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.
8 hour(s) ago
8 hour(s) ago