உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

காஞ்சியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில், தனியார் வேலை வாய்ப்பு முகாம் நாளை நடத்தப்பட உள்ளது.காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், நடைபெற உள்ள இம்முகாமில் தனியார் நிறுவனங்கள், பங்கேற்று, 1,000க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு நடத்த உள்ளனர். பட்டதாரிகள், டிப்ளமோ, ஐ.டி.ஐ., பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு படித்தவர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர்.எனவே, 18 - 35 வயது வரை உள்ளவர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன், காலை 9:30 மணிக்கு, காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து, வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம்.கூடுதல் விபரங்களுக்கு, 044- 27237124 என்ற தொலைபேசி எண்ணில், காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்து உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை