உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சர்வதீர்த்த குளம் நடைபாதை சீரமைக்க வலியுறுத்தல்

சர்வதீர்த்த குளம் நடைபாதை சீரமைக்க வலியுறுத்தல்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் - அரக்கோணம் செல்லும் சாலையில், சர்வதீர்த்த குளம் அமைந்துள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, இந்த குளம், ஏகாம்பரநாதர் கோவில் நிர்வாகம் சார்பில், பராமரிக்கப்பட்டு வருகிறது.கடந்த 2011ல், 45 லட்சம் ரூபாய் மதிப்பில், குளம் துார்வாரப்பட்டு, குளத்தை சுற்றி தடுப்பு வேலி அமைக்கப்பட்டது. நடைபயிற்சி மேற்கொள்வதற்காக குளக்கரையை சுற்றிலும், டைல்ஸ் பதிக்கப்பட்டு நடைபாதை அமைக்கப்பட்டது. அப்பகுதியினர் தினமும் காலை, மாலையில் நடைபயிற்சி மேற்கொண்டு வந்தனர்.முறையான பராமரிப்பு இல்லாததால், இரவு நேரத்தில் மதுபிரியர்கள் நடைபாதையில் மது அருந்திவிட்டு, காலி மதுபாட்டில்களை உடைத்து செல்வது, சூதாட்டம் ஆடுவது உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.இதனால், நடைபயிற்சி மேற்கொள்வோர் குளக்கரைக்கு செல்வதை தவிர்த்து விட்டதால், நடைபாதையில் செடி, கொடிகள் புதர்போல மண்டி விஷ ஜந்துக்கள் அதில் தஞ்சமடைந்துள்ளன.லட்சகணக்கான ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட நடைபாதை பயன்பாடின்றி வீணாகி வருகிறது. மேலும், குளத்தின் மையப்பகுதியில் உள்ள நீராழி மண்டபத்திலும் செடிகள் வளர்ந்துள்ளன. செடிகளின் வேர்களால் மண்டபம் சேதமடையும் சூழல் உள்ளது.எனவே, நீராழி மண்டபத்தில் வளர்ந்துள்ள செடிகளை அகற்றுவதோடு, நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையில், நடைபாதையை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர ஹிந்து சமய அறநிலையத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை