மேலும் செய்திகள்
இடையூறான மின்கம்பம்: மணியாட்சியில் அகற்றம்
9 hour(s) ago
ஸ்ரீபெரும்புதுார், : சுங்குவார்சத்திரம் அருகே, தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்காக, ஒருவழி சாலையாக மாற்றப்பட்ட சாலையில், எதிர் திசையில் வந்த கன்டெய்னர் லாரிக்கு வழிவிட ஒதுங்கிய போது, சாலையோரம் உள்ள பள்ளத்தில் சொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் இருந்து, 30க்கும் மேற்பட்ட பயணியரை ஏற்றிக் கொண்டு, நேற்று காலை ஆம்னி சொகுசு பேருந்து சென்னை வந்தது.சென்னை- - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், சுங்குவார்சத்திரம் அருகே வந்த போது, தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்காக, ஒருவழி சாலையாக மாற்றப்பட்ட சாலையில், எதிர் திசையில் வந்த கன்டெய்னர் லாரிக்கு வழிவிட ஒதுங்கிய போது, ஓட்டுனரின் கட்டுபாட்டை இழந்த சொகுசு பேருந்து, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.ஒருவழி சாலையில் மெதுமாக சென்றதால், பேருந்தில் பயணித்த மூவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. சுங்குவார்சத்திரம் போலீசார், பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்தை மீட்டு போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும், விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
9 hour(s) ago