மேலும் செய்திகள்
செடிகளால் குடிநீர் தொட்டி வலுவிழக்கும் அபாயம்
8 hour(s) ago
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலையோரம், 'கான்கிரீட்' மழைநீர் வடிகால்வாயின்மீது நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. கனரக வாகன போக்கு வரத்து அதிகம் உள்ள இச்சாலையில், பாதசாரிகள்விபத்தில் சிக்குவதை தவிர்க்க நடைபாதையை பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில், பெரியார் நகரில், நடைபாதையின் மீது போடப்பட்டுள்ளசிமென்ட் சிலாப் உடைந்து கால்வாய்க்குள் விழுந்துள்ளது.இதனால், நடைபாதையின் மீது, நடந்து செல்லும் பாதசாரிகள், கவனகுறைவாக திறந்து கிடக்கும் கால்வாயில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது. எனவே, நடைபாதையில், திறந்து கிடக்கும் மழைநீர் கால்வாயின் மீது சிமென்ட் சிலாப் உடைந்த பகுதியை சீரமைக்க வேண்டும் என, கோரிக்கைஎழுந்துள்ளது.
8 hour(s) ago