உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கூடுதல் மேல்நிலை தொட்டி அமைக்க மனு

கூடுதல் மேல்நிலை தொட்டி அமைக்க மனு

காஞ்சிபுரம்:அய்யங்கார்குளம் கிராமத்தில் உள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப, 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட கூடுதல் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அமைக்க வேண்டும் என, அய்யங்கார்குளத்தை சேர்ந்த சிவகுமார், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வியிடம் வழங்கியுள்ள கோரிக்கை மனு விபரம்:காஞ்சிபுரம் ஒன்றியம், அய்யங்கார்குளம் ஊராட்சி, தற்போது மிகவும் வேகமாக வளர்ச்சி அடைந்து, அதிக அளவிலான மனைப்பிரிவுகளும், குடியிருப்பு பகுதிகளும் உருவாக்கப்பட்டு, மக்கள் தொகை பெருமளவில் அதிகரித்துள்ளது.எனவே, கூடுதலாக 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி, ஊராட்சி நிர்வாகம் வாயிலாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை