உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தங்காவதீஸ்வரர் கோவிலில் சிவன், பார்வதி சிலைகள் திருட்டு

தங்காவதீஸ்வரர் கோவிலில் சிவன், பார்வதி சிலைகள் திருட்டு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் மேட்டுத் தெருவில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், கச்சி அநேக தங்காவதீஸ்வரர் கோவில் உள்ளது.நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல, அர்ச்சகர் ரமேஷ், கோவிலை பூட்டி விட்டு சென்றார். நேற்று காலை, அர்ச்சகர் ரமேஷ், கோவிலை திறக்க வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டார்.உள்ளே சென்று பார்த்தபோது, பித்தளையால் ஆன 1 அடி உயர சிவன் சிலையும், முக்கால் அடி உயர பார்வதி சிலையும், காப்பர் குடம் திருட்டு போயிருந்தன. சிவ காஞ்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரிக்கின்றனர்.இதுகுறித்து, கோவில் செயல் அலுவலர் முத்துலட்சுமி கூறியதாவது:இந்த கோவிலுக்கு, 2012ம் ஆண்டு பிரதோஷ சிவன் மற்றும் பார்வதி சிலையை உபயதாரர் ஒருவரால் கொடுக்கப்பட்டு இருந்தது. கோவில் முறை செய்பவர்கள், பிரதோஷம் முடிந்த பின், சிலைகளை வீட்டிற்கு எடுத்துச் சென்றுவிடுவது வழக்கம்.தற்போது இருக்கும் முறைக்காரர், புதியவர் என்பதால், சிலைகளை கோவில் வளாகத்தில் வைத்திருக்கிறார். இதை மர்ம நபர்கள் திருடி சென்று உள்ளனர்.மேலும், கோவிலுக்கு உண்டியல் ஏதுவும் இல்லை. இந்த திருட்டு தொடர்பாக, காவல் நிலையத்தில், புகார் அளிக்கப்பட்டு உள்ளது. சிவன் மற்றும் பார்வதி சிலைகளை மீட்க, போலீசார் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.சிவகாஞ்சி ஆய்வாளர் ஜெயவேல் கூறுகையில், 'சிலைகள் திருடு போன இடத்தில், தடயங்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன. சிலை திருடியவர்களை விரைவில் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை