உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மரத்துாள் பை வெடித்து சிறுவன் உட்பட இருவர் காயம்

மரத்துாள் பை வெடித்து சிறுவன் உட்பட இருவர் காயம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் தாயார்குளம் அருகே, தனலட்சுமி என்ற பெயரில் மின்னணு எடை இயந்திரமும், மரம் அறுக்கும் பட்டறையும் இயங்கி வருகிறது. இங்கு, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண் என, 6 பேர் தங்கி, பணியாற்றி வந்துள்ளனர்.இந்நிலையில், பட்டறையில் சேகரமாகும் மரத்துாள், பைகளில் அடைக்கும் பணிகள் நேற்று காலை நடந்துள்ளது. அப்போது, மரத்துார் பை சூடாகி வெடித்துள்ளது.இதில், ராஜ்பவன், 21, 4 வயதான அங்கித் என்ற சிறுவனும் படுகாயமடைந்தனர். தகவலறிந்த சிவகாஞ்சி போலீசார், சம்பவ இடத்திற்கு சென்றனர்.காயடைமடைந்த இருவரையும், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்து, அங்கிருந்து தீவிர சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். விபத்து நடந்தது குறித்து, சிவகாஞ்சி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை