உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஆண்டிற்கு ரூ.15,000 நிதி கோரி ஆட்டோ ஓட்டுநர்கள் மனு

ஆண்டிற்கு ரூ.15,000 நிதி கோரி ஆட்டோ ஓட்டுநர்கள் மனு

கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைதீர் கூட்டத்தில், பட்டா, பட்டா திருத்தம், ஆக்கிரமிப்பு அகற்றுதல், வேலைவாய்ப்பு, உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு வகையான கோரிக்கை தொடர்பாக, 327 பேர், கலெக்டர் கலைச்செல்வியிடம் மனு அளித்தனர். மேலும், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள ஆட்டோ ஓட்டுநர் குடும்பத்திற்கு, ஆந்திர அரசு, ஆண்டிற்கு, 15,000 ரூபாய் நிதி உதவி அளித்து வருகிறது. அதேபோல், தமிழக அரசும் வழங்க வேண்டும் என, ஹிந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கத்தினர், கலெக்டரிடம் மனு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ