உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கழிவுநீர் கால்வாயில் அடைப்பு கீழம்பியில் கொசு அதிகரிப்பு

கழிவுநீர் கால்வாயில் அடைப்பு கீழம்பியில் கொசு அதிகரிப்பு

கீழம்பி:காஞ்சிபுரம் ஒன்றியம் கீழம்பி, அமராவாதிபட்டிணம் பிரதான சாலையில், மழைநீர் மற்றும் வீட்டு உபயோக கழிவுநீர் வெளியேறும் வகையில், சாலையோரம் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இக்கால்வாயை ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால் செடி, கொடிகள் வளர்ந்து, மண் திட்டுகளால் கால்வாய் துார்ந்த நிலையில் உள்ளது.இதனால், கழிவுநீர் முழுமையாக வெளியேறாமல் கால்வாயில் தேங்கியுள்ளதால், அப்பகுதியில் கொசு தொல்லை அதிகரித்துள்ளதாக பகுதிவாசிகள் புகார் தெரிவிக்கின்றனர். இதனால், கீழம்பியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே, அமராவதிபட்டிணம் பிரதான சாலையில் உள்ள கால்வாயை முழுமையாக துார்வாரி, சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை