உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்: விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

 சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்: விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சி, திருக்காலிமேடு பிரதான சாலையில், போக்கு வரத்திற்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து, தொழுவத்தில் ஒப்படைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் மாநகராட்சி, திருக்காலிமேடு மஞ்சள்நீர் கால்வாய் சிறுபாலம் வழியாக சின்ன காஞ்சிபுரம், பேருந்து நிலையம், ரயில்வே சாலை, மின் நகர், மாமல்லன் நகர் உள்ளிட்ட இடங்களுக்கு அப்பகுதி மக்கள் சென்று வருகின்றனர். இந்நிலையில், திருக் காலிமேடு சுற்றியுள்ள பகுதியில் மாடு வளர்ப்போர், அவற்றை தங்கள் வீட்டில் கட்டி வைத்து பராமரிக்காமல் மேய்ச்சலுக்காக வெளியே அவிழ்த்து விடுகின்றனர். மேய்ச்சலுக்காக செல்லும் மாடுகள், திருக்காலிமேடு மஞ்சள்நீர் கால்வாய் சிறுபாலம் அருகில், சாலையை மறித்து நிற்பதோடு, குறுக்கும் நெடுக்குமாக மிரண்டு ஓடுவதால், பாதசாரிகளும், இருசக்கர வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, திருக்காலிமேடு பிரதான சாலையில், போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து தொழுவத்தில் ஒப்படைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை