மேலும் செய்திகள்
செடிகளால் குடிநீர் தொட்டி வலுவிழக்கும் அபாயம்
9 hour(s) ago
ஸ்ரீபெரும்புதுார்:வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையில், செரப்பணஞ்சேரி அடுத்த காரணித்தாங்களில் இருந்து, பெரிஞ்சம்பாக்கத்திற்கு சாலை பிரிந்து செல்கிறது. இச்சாலை வழியே நாள்தோறும், ஏராளமானோர் சென்று வருகின்றனர்.இந்த நிலையில், இந்த சாலையை ஒட்டி, மின் கம்பங்கள் வழியே, மின் வழித்தடம் செல்கிறது. இவற்றில் 3 மின்கம்பங்கள் முற்றிலும் சேதமடைந்து உள்ளது.சிமென்ட் காரை உதிர்ந்து, இரும்பு கம்பிகள் வெளியில் தெரியும் நிலையில், எலும்புகூடு போல் மின்கம்பங்கள் உள்ளதால், வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இந்த சாலையில் மின் விபத்து ஏற்படும் அச்சத்தில் சென்று வருகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதியினர் மற்றும் வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
9 hour(s) ago