உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மின்கம்பி உரசும் மரக்கிளைகளால் புத்தேரியில் மின்விபத்து அபாயம்

மின்கம்பி உரசும் மரக்கிளைகளால் புத்தேரியில் மின்விபத்து அபாயம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஒன்றியம், புத்தேரி ஊராட்சி, மேட்டு தெருவிற்கு செல்லும் பிரதான சாலையோரம், அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் விவசாய நிலங்களுக்கு மின் இணைப்பு வழங்க, சாலையோரம் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இதில், சாலையோரம் அமைந்துள்ள இரு மரத்தின் கிளைகள் மின்கம்பிகளை உரசும் வகையில், கம்பிகளை மறைக்கும் அளவிற்கு, புதர்போல வளர்ந்துள்ளது. காற்றடிக்கும்போது மரக்கிளைகள் மின்கம்பியில் ஒன்றுடன் ஒன்று உரசும்போது, அப்பகுதியில் மின் இணைப்பு துண்டிப்பு ஏற்படுவதாக அப்பகுதியினர் புகார் தெரிவிக்கின்றனர்.மேலும்,மழைக்காலங்களில் தீப்பொறி ஏற்பட்டு மின்கம்பி அறுந்து விழுந்து மின்விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.எனவே, வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், மின்கம்பிகளை உரசும் வகையில் வளர்ந்துள்ள மரக்கிளைகளை அகற்ற மின்வாரியத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, புத்தேரியினர் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ