மேலும் செய்திகள்
சட்டசபை தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியமனம்
8 minutes ago
காஞ்சிபுரம்: கருப்படிதட்டடை ஊராட்சியில், செடிகள் வளர்ந்து துார்ந்த நிலையில் உள்ள வடிகால்வாயால் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் ஒன்றியம், கருப்படிதட்டடை ஊராட்சி, பஞ்சுபேட்டையில் உள்ள மாநில அரசு விதைப் பண்ணை விவசாய நிலம் மற்றும் அப்பகுதியில் பெய்யும் மழைநீர் வெளியேறும் வகையில் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இக்கால்வாயை முறையாக பராமரிக்காததால், கால்வாயில் செடிகள் வளர்ந்து, கால்வாய் துார்ந்து உள்ளது. இதனால், வடிகால்வாய் மூலம் வெளியேற வேண்டிய மழைநீர் குடியிருப்பு பகுதியையும், விவசாய நிலத்தையும் சூழும் நிலை உள்ளது. எனவே, செடிகள் வளர்ந்து துார்ந்த நிலையில் உள்ள மழைநீர் வடிகால்வாயை துார்வாரி சீரமைக்க, கருப்படி தட்டடை ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப் பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
8 minutes ago