உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தக்காளி வரத்து அதிகரிப்பால் 3 கிலோ ரூ.100க்கு விற்பனை

தக்காளி வரத்து அதிகரிப்பால் 3 கிலோ ரூ.100க்கு விற்பனை

காஞ்சிபுரம்,:ஆந்திர மாநிலத்திலும், தமிழகத்தில் கிருஷ்ணகிரி, ஓசூர் உள்ளிட்ட மாவட்டத்தில் விளையும் தக்காளி, காஞ்சிபுரம் சந்தைகளுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.கடந்த மாதம் ஆந்திர மாநிலத்தில் பெய்த மழையால் தக்காளி விளைச்சல் வெகுவாக பாதிக்கப்பட்டது. இதனால், தமிழகத்திற்கு தக்காளி வரத்து வெகுவாக குறைந்ததால், காஞ்சிபுரத்தில் இம்மாதம் முதல் வாரத்தில், கிலோ தக்காளி அதிகபட்சமாக 80 ரூபாய்க்கு விற்கப்பட்டது.இந்நிலையில், ஆந்திராவில் விளைச்சல் அதிகரித்து, தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால், விலை சரிந்துள்ளது. இதனால், காஞ்சிபுரம் வீதிகளில் நடமாடும் கடைகளில் மூன்று கிலோ தக்காளி 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. விலை வீழ்ச்சியடைந்துள்ளதால், இல்லத்தரசிகள் கிலோ கணக்கில் தக்காளி வாங்கிச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி