உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சங்கரமடத்தில் 20ல் ஜெயேந்திரர் ஆராதனை

சங்கரமடத்தில் 20ல் ஜெயேந்திரர் ஆராதனை

காஞ்சிபுரம்:காஞ்சி காமகோடி பீடத்தின் 69வது மடாதிபதி, சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஆறாவது வார்ஷிக ஆராதனை மஹோத்சவம் வரும் 22ல், காஞ்சிபுரம் சங்கரமடத்தில் நடைபெறுகிறது.இதையொட்டி, வரும் 20 - 22 வரை என, மூன்று நாட்கள், காஞ்சிபுரம் சங்கரமடத்தில் நடைபெறும், ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் வார்ஷிக ஆராதனை மஹோத்சவத்தில் வேதபாராயணம், வித்வத்ஸதஸ், உபன்யாசம், நாமசங்கீர்த்தனம், சங்கீதாஞ்சலி நடக்கிறது.வார்ஷிக ஆராதனை மஹோத்ஸவ தினமான, வரும் 22ல், காலை 7:00 மணிக்கு ஸ்ரீருத்ர பாராயணம், ஹோமம், மதியம் 1:00 மணிக்கு பூர்ணாஹூதியும், சுவாமிகளின் பிருந்தாவனத்தில் அபிஷேகம் நடைபெறுகிறது.காலை 9:00 மணி முதல், பஞ்சரத்ன கீர்த்தனை, கோஷ்டி கான நாத சமர்ப்பணம் உள்ளிட்டவை நடக்கிறது. வார்ஷிக ஆராதனை மஹோத்சவத்திற்கான ஏற்பாட்டை காஞ்சிபுரம் சங்கரமடம் மேலாளர் சுந்தரேச அய்யர், ஸ்ரீகார்யம் சல்லா விஸ்வநாத சாஸ்திரி, மடத்தின் நிர்வாகி கீர்த்திவாசன் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி