உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மார்கழி பஜனையில் பங்கேற்ற சிறுவர் -- சிறுமியருக்கு பாராட்டு

மார்கழி பஜனையில் பங்கேற்ற சிறுவர் -- சிறுமியருக்கு பாராட்டு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையத்தில் அனாதிருத்ரேஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில், சிறுவர் - சிறுமியர் திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாடல்களை பஜனையாக பாடி வருகின்றனர்.அதன்படி, நடப்பு ஆண்டு 100க்கும் மேற்பட்ட சிறுவர் - சிறுமியர், அதிகாலையில் திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாடல்களை பஜனை பாடல்களாக பாடியபடி, பல்வேறு வீதி வழியாக செல்கின்றனர்.கோவிலை அடைந்ததும், சிவபெருமானுக்கு பூஜைகள் செய்தபின், அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்படுகிறது.வெட வெடக்கும் மார்கழி குளிரிலும், திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாடல்களை பக்தியுடன் பாடி வரும் மாணவ- - மாணவியரை, வல்லக்கோட்டை முருகன் கோவில் நிர்வாக அதிகாரி செந்தில்குமார் நேற்று பாராட்டி, எழுது பொருட்கள் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை