உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஆதிலிங்கேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை

ஆதிலிங்கேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை

உத்திரமேரூர்:ஆதவப்பாக்கம் ஆதிலிங்கேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நேற்று விமரிசையாக நடந்தது. உத்திரமேரூர் ஒன்றியம், ஆதவப்பாக்கத்தில் ஆதவனநாயகி சமேத ஆதிலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. புதிதாக கட்டப்பட்ட இக்கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடந்தது. முன்னதாக, காலை 6:00 மணிக்கு கணபதி பூஜை, கோ பூஜை நடந்தது. காலை 9:00 மணிக்கு, யாக சாலையில் இருந்து பூஜிக்கப்பட்ட கலசநீரை, மூலவரான ஆதவனநாயகி சமேத ஆதிலிங்கேஸ்வரர் மீது ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ