உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / உத்திரமேரூரில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

உத்திரமேரூரில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

உத்திரமேரூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரைச் சேர்ந்த வழக்கறிஞர் கண்ணன், கடந்த 22ல் தாக்கப்பட்டார். இதை கண்டித்து, உத்திரமேரூரில் வழக்கறிஞர்கள் நேற்று கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.வழக்கறிஞர்கள் யாரும் பணிக்கு வராததால், வெறிச்சோடி காணப்பட்டது.இது குறித்து வழக்கறிஞர்கள் சங்க தலைவர் கருணாநிதி கூறியதாவது:வழக்கறிஞர்கள் தாக்கப்படுவதை தடுக்க பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும். ஓசூரில் போராட்டம் நடத்திய வழக்கறிஞர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்ப பெற வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ