உள்ளூர் செய்திகள்

இலக்கிய கூட்டம்

காஞ்சிபுரம், : காஞ்சிபுரத்தில், இலக்கிய வட்டக் கூட்டம் நேற்று நடந்தது. இதில், 'ஆசீவகமும் -தமிழரும்' என்ற தலைப்பில் தமிழ்முகிலன் உரையாற்றினார்.'மணிமேகலை காப்பிய ஒப்பிலக்கியக் கட்டுரைகள்' என்ற நுாலை ஆசிரியர் சந்திரகுமார். கவிஞர் வேலா கந்தசாமி ஆகியோர் திறனாய்வு செய்தனர்.நுாலாசிரியர் எழுத்தாளர் ஜெயபிரகாஷ் ஏற்புரை வழங்கினார். கவிஞர் செல்வராசு, 'தமிழர் திருநாள்' என்ற தலைப்பில் கவிதை வாசித்தார். வழக்கறிஞர் தமிழரசு, காஞ்சி இளங்கவி ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்