பைக் மோதி வடமாநில தொழிலாளி உயிரிழப்பு
காஞ்சிபுரம்:பீகார் மாநிலம், கிழக்கு ஷெம்ராம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அகிலேஷ் மஞ்சகி, 44. இவர், காஞ்சிபுரம் அருகே உள்ள கருப்படித்தட்டடை ஊராட்சியில் உள்ள அரிசி ஆலையில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலையில், நேற்று முன்தினம் இரவு அகிலேஷ் மஞ்சகி நடந்து சென்றுக் கொண்டிருந்தார். அவ்வழியே பின்னால் வந்த 'ஹோண்டா ஷைன்' இருசக்கர வாகனம், இவர் மீது மோதியதில் படுகாயமடைந்தார்.அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவர்கள் பரிசோதனையில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது. இதுகுறித்து, பொன்னேரிக்கரை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.