உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சீட்டணஞ்சேரியில் ரேஷன் கடை திறப்பு

சீட்டணஞ்சேரியில் ரேஷன் கடை திறப்பு

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், குருமஞ்சேரி ஊராட்சிக்கு உட்பட்டது சீட்டணஞ்சேரி கிராமம். இப்பகுதியில் ரேஷன் கடை இல்லாததால், அங்குள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ரேஷன் பொருட்கள் இருப்பு வைத்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு வினியோகிக்கப்பட்டது.இதனால், போதுமான இடவசதி இல்லாமல் நெருக்கடி இருந்து வந்தது.இதனிடையே, சீட்டணஞ்சேரியில் புதிதாக ரேஷன் கடை கட்ட, ஒன்றிய பொது நிதியின் கீழ், 4.40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த மாதங்களில் பணி நடைபெற்றது.அப்பணி முழுமையாக நிறைவு பெற்றதையடுத்து, நேற்று முதல், பயன்பாட்டுக்கு வந்தது உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் கட்டடத்தை திறந்து வைத்து, ரேஷன் பொருட்கள் வினியோகத்தை துவக்கினார்.சாலவாக்கம் தி.மு.க., ஒன்றிய செயலர் குமார், மாவட்ட குழு உறுப்பினர் சிவராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி