உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கிழிந்து தொங்கும் பேனரால் விபத்து அபாயம்

கிழிந்து தொங்கும் பேனரால் விபத்து அபாயம்

ஸ்ரீபெரும்புதுார்,வல்லக்கோட்டை சாலையில் உள்ள கட்டடங்களின் மீது வைக்கப்பட்டுள்ள ராட்சத விளம்பர பேனர், காற்றில் கிழிந்து தொங்குவதால், அவ் வழியாக செல்லும் வாகன ஓட்டி கள் அச்சத்துடன் பயணம் செய்து வருகின்றனர். ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் சாலை, வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையை பயன்படுத்தி, தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், வண்டலுார் - - வாலாஜாபாத் சாலை, ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலையோரம், ஒரகடம், வல்லக்கோட்டை, செரப்பனஞ்சேரி, காரணித்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில், சாலையோரம் உள்ள கட்டடங்களின் மீதும், அருகே உள்ள இடங்களில் ஏராளமான விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனால், வாகன ஓட்டிகள் கவன சிதறல் ஏற்பட்டு அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். மேலும், பலத்த காற்று அடிக்கும் போது கட்டடங்களில் உள்ள இந்த பேனர்கள் சாலையில் விழுவதால் விபத்தும் ஏற்படுகிறது. இந்த நிலையில், ஒரகடம் அருகே, வல்லக்கோட்டை பகுதியில், சாலையோரம் உள்ள கட்டடத்தின் மீது வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர் கா ற்றில் கிழிந்து, அந்தரத்தில் தொங்குகிறது. இதனால் , வாகன ஓட்டிகள் விபத் து ஏற்படும் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, நெடுஞ்சாலையோரம் வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ