உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  பாதாள சாக்கடையில் அடைப்பு சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

 பாதாள சாக்கடையில் அடைப்பு சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் செங்கழுநீரோடை வீதியில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் வழிந்தோடுவதால், துர்நாற்றம் வீசுவதுடன், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. காஞ்சிபுரம் செங்கழுநீரோடை வீதியில், நேரு மார்க்கெட், ஜவுளி, நகை, திருமண மண்டபம், பூக்கடை உள்ளிட்ட பல்வேறு வணிக நிறுவனங்கள் உள்ளன. காஞ்சிபுரம் காமாட்சியம்மன் மற்றும் ஆதிபீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் கோவிலுக்கு செல்வோர் செங்கழு நீரோடை வீதி வழியாக சென்று வருகின்றனர். இந்நிலையில், செங்கழுநீரோடை வீதியில் இருந்து, காமாட்சி அம்மன் கோவிலுக்கு செல்லும் வடக்கு மாட வீதி அருகில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு ஒரு வாரமாக, கழிவுநீர் சாலையில் வழிந்தோடி வருகிறது. தொடர்ந்து வெளி யேறும் கழிவுநீரால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. எனவே, செங்கழுநீரோடை வீதியில், பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பை முழுதும் நீக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை