உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மளிகை கடையில் குட்கா விற்ற இருவர் கைது

மளிகை கடையில் குட்கா விற்ற இருவர் கைது

ஸ்ரீபெரும்புதுார், ஸ்ரீபெரும்புதுார் அருகே, வெள்ளாரை கிராமத்தில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக, ஸ்ரீபெரும்புதுார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அதன்படி, நேற்று காலை, அங்கு சென்ற போலீசார், பஜனை கோவில் தெருவில் உள்ள மளிகை கடையில் சோதனையில் ஈடுபட்டனர். அதில், ஹான்ஸ், ஸ்வாகத், கூல் லிப் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனைக்கு மறைத்து வைத்திருந்தது தெரிந்தது.இதையடுத்து, 8,000 ரூபாய் மதிப்புள்ள இரண்டரை கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீசார், கடையின் உரிமையாளாரான மகேந்திரகுமார், 49 மற்றும் அவரது மகன் கிஷோர்குமார், 18, ஆகிய இருவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை