உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வாலாஜாபாத் பேருந்து நிலையத்தில் நேர கண்காணிப்பாளர் அறை வருமா?

வாலாஜாபாத் பேருந்து நிலையத்தில் நேர கண்காணிப்பாளர் அறை வருமா?

வாலாஜாபாத்,வாலாஜாபாத் பேரூராட்சியில், 20,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். மேலும், வாலாஜாபாத் சுற்றிலும் 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.வாலாஜாபாத் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர், தினமும் வாலாஜாபாத் பேருந்து நிலையம் வந்து, அங்கிருந்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர், தாம்பரம் உள்ளிட்டபகுதிகளுக்கு பேருந்து வாயிலாக சென்றுவருகின்றனர்.இந்நிலையில், காஞ்சி புரம் - செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் பேருந்துகள் மற்றும் காஞ்சிபுரத்தில் இருந்து, வாலாஜா பாத் வழியாக பல கிராமங்களுக்கு செல்லும் பேருந்துகள், பேருந்து நிலையத்திற்கு உள்ளே வராமல், நேரடியாக பிரதான சாலை வழியாக இயக்கப்படுகிறது.இதனால், பேருந்து நிலையத்திற்குள் பேருந்துக்காக காத்திருக்கும் பயணியர், பேருந்து, எப்போது வருகிறது என தெரியாமல் குழப்பம் அடைகின்றனர்.எனவே, வாலாஜாபாத் பேருந்து நிலையத்தில் நேர கண்காணிப்பாளர் அறை ஏற்படுத்தி, ஊழியர்களை நியமித்து, பேருந்துகள் வருகை குறித்து ஒலிபெருக்கி வாயிலாக அறிவிப்பு செய்ய வேண்டும் என, பயணியர் மற்றும்சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை