மேலும் செய்திகள்
புகழூர் துர்க்கை அம்மன் கோவிலில் நாகர் சதுர்த்தி
10-Aug-2024
கரூர்: ஆவணி மாத சஷ்டியையொட்டி, கரூர் மாவட்டம் புகழிமலை பாலசுப்பிரமணி சுவாமி கோவிலில், மூலவருக்கு, நேற்று மாலை, பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், திருமஞ்சனம் உள்ளிட்ட, 18 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபி-ஷேகம் நடந்தது. அதைதொடர்ந்து, பூக்கள் அலங்காரத்தில் மூலவர், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மஹா தீபாராதனைக்கு பின், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.இதேபோல், வெண்ணைமலை சுப்பிரமணிய சுவாமி கோவில், நன்செய் புகழூர் அக்ரஹாரம் சுப்பிரமணிய சுவாமி கோவில், புன்னம் சத்திரம் பாலமலை சுப்பிரமணிய சுவாமி கோவில்களில், ஆவணி மாத சஷ்டியையொட்டி, சிறப்பு பூஜை நடந்தது.
10-Aug-2024