உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூரில் வக்கீல்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

கரூரில் வக்கீல்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

கரூர்: கரூர் அட்வகேட் பார் கவுன்சில் சார்பில், ஒருங்கிணைந்த நீதி-மன்றம் முன், மாவட்ட செயலாளர் நகுல்சாமி தலைமையில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.அதில், முப்பெரும் சட்டங்களின் பெயர்களை ஹிந்தி மற்றும் சமஸ்கிருதம் மொழியில் மாற்றியுள்ளதை கண்டித்தும், சட்டங்-களை அமல்படுத்தும் முடிவுகளை, மத்திய பா.ஜ., கூட்டணி அரசு திரும்ப பெற, வலியுறுத்தியும் கோஷம் எழுப்பப்பட்டது. அதேபோல், கரூர் மாவட்ட தி.மு.க., வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், மாநில சட்டத்துறை இணை செயலாளர் மணிராஜ் தலை-மையில், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன் நேற்று ஆர்ப்-பாட்டம் நடந்தது. நுாற்றுக்கும் மேற்பட்ட வக்கீல்கள் பங்கேற்-றனர். பிறகு, வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பிலும் ஈடுபட்-டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ