| ADDED : ஜூலை 06, 2024 12:00 AM
கரூர்: புன்னம்சத்திரம், கரியாம்பட்டி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், ஆனி மாத அமாவாசையையொட்டி, சிறப்பு அலங்-காரம் நேற்று நடந்தது.பிரசித்தி பெற்ற, கரியாம்பட்டி அங்காள பரமேஸ்வரி கோவிலில், ஆனி மாத அமாவாசையையொட்டி, மூலவர் அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், திருமஞ்சனம் உள்ளிட்ட, 18 வகையான வாசனை திரவியங்கள் மூலம் அபிேஷகம் நடந்தது.அதை தொடர்ந்து, சிறப்பு பூக்கள் அலங்காரத்தில் அம்மன் பக்தர்-களுக்கு காட்சியளித்தார். மஹா தீபாராதனைக்கு பிறகு, பக்தர்க-ளுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.மாயனுார் செல்லாண்டியம்மன் கோவிலில், அம்மனுக்கு பல்-வேறு வகையான அபிேஷகம் செய்யப்பட்டது. மாயனுார், திருக்காம்புலியூர், லாலாப்பேட்டை பகுதி மக்கள் அம்மனை வழிபட்டனர்.* சிந்தலவாடி மாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு சிறப்பு வழி-பாடு பூஜை நடந்தது. அம்மனுக்கு மலர் மாலைகள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. லாலாப்பேட்டை, சிந்தலவாடி, மகி-ளிப்பட்டி, புனவாசிப்பட்டி பகுதி மக்கள் அம்மனை வழிபட்-டனர்.