உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / 100 நாள் வேலை திட்டத்தில் பணி வினோபாஜிபுரம் கிராம மக்கள் மனு

100 நாள் வேலை திட்டத்தில் பணி வினோபாஜிபுரம் கிராம மக்கள் மனு

கரூர்: நுாறு நாள் வேலை உறுதி திட்டத்தில், பணி வழங்க வேண்டும் என, வினோபாஜிபுரம் கிராம மக்கள், கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தனர்.அதில், கூறியிருப்பதாவது:கடவூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மாவத்துார் பஞ்சாயத்தில், தேசிய ஊரக வேலை உறுதி திட்-டத்தில், ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர். 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் மக்களுக்கு வேலை வழங்கி வருகின்-றனர். ஆனால், வினோபாஜிபுரம் கிராம மக்களுக்கு மட்டும் வேலை வழங்கவில்லை. இது குறித்து சரியான பதில் தருவது இல்லை. இந்த கிராமத்தில் உள்ள, 5 ஏக்கர் பரப்பளவு கொண்ட குளத்தை துார் வார வேண்டும். இதற்கு, 100 நாள் திட்ட பணியா-ளர்களை பயன்படுத்தி கொள்ளவும் என பல முறை கோரிக்கை வைக்கப்பட்டது. உடனடியாக, 100 வேலை உறுதி திட்டத்தில் பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை