உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அ.குறிச்சியில் பணம் வைத்து விளையாடிய 5 பேர் கைது

அ.குறிச்சியில் பணம் வைத்து விளையாடிய 5 பேர் கைது

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி அருகே, பணம் கட்டி விளையாடுவதாக, போலீசா-ருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அரவக்குறிச்சி போலீசார், நேற்று முன்தினம் இரவு, அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அரவக்குறிச்சி அருகே, பச்சைப்பள்ளி பாறை பகு-தியில், ஒரு முள் காட்டில் பணம் வைத்து விளையாடுவது கண்டு-பிடிக்கப்பட்டது. இதில், கரூர் மாவட்டம், புத்தாம்பூர் அருகே, வடுகப்பட்டியைச் சேர்ந்த துரைமுருகன், நல்லுசாமி, பாகநத்தம் அருகே, ஊத்தங்கரைப்பட்டியை சேர்ந்த பிரகாஷ், புத்தாம்பூரை சேர்ந்த சிவக்குமார், சமத்துவபு-ரத்தை சேர்ந்த தங்கராஜ் ஆகிய, ஐந்து பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 2,800 ரூபாயை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்