உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சுதந்திர தின விழாவையொட்டி ரயில்வே ஸ்டேஷனில் பாதுகாப்பு

சுதந்திர தின விழாவையொட்டி ரயில்வே ஸ்டேஷனில் பாதுகாப்பு

கரூர், கரூர் ரயில்வே ஸ்டேஷனில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.நாட்டின், 76 வது சுதந்திர தினவிழா இன்று நாடு முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதையொட்டி துணை ராணுவத்தினர் மற்றும் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கரூர் ரயில்வே ஸ்டேஷனிலும், ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் பாதுகாப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும், கரூர் அருகே பசுபதிபாளையம் அமராவதி ஆற்றின் குறுக்கே உள்ள, ரயில்வே பாலத்தில் போலீசார், மெட்டல் டிடெக்டர் மூலம் வெடிகுண்டு சோதனையிலும் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை