உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் படுகாயம்

அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் படுகாயம்

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி அருகே நடந்து சென்ற முதியவர் மீது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயமடைந்தார்.அரவக்குறிச்சி ஜீவா நகரை சேர்ந்தவர் சங்கர், 60. இவர் நேற்று முன்தினம் இரவு 9:00 மணியளவில், அரவக்குறிச்சியிலிருந்து தாராபுரம் செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வேகமாக வந்த, அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று நடந்து சென்ற சங்கர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்த சங்கருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.உடனடியாக அவரை மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இது தொடர்பாக சங்கர் மகள் கவிதா கொடுத்த புகார்படி, அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை