உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஓய்வூதிய விபரங்களை முறையாக பதிவு செய்ய பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்

ஓய்வூதிய விபரங்களை முறையாக பதிவு செய்ய பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்

கரூர்: 'ஓய்வூதிய புத்தகத்தில் கடைசியாக பெற்ற ஓய்வூதிய விபரங்களை முறையாக பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, ஓய்வூதியர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கரூரில் ஊரக வளர்ச்சித்துறை ஓய்வூதியர்கள் சங்க, மாவட்ட கிளை பொதுக்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ராஜவேல் தலைமை வகித்தார். ஓய்வூதியர் குடும்ப ஓய்வூதியர்களுக்கு மருத்துவப் படியாக மாதம், 1,000 ரூபாய் வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்கள், 70 வயது நிறைவு செய்தவர்களுக்கு, 10 சதவீத கூடுதல் ஓய்வூதியம் வழங்க அரசாணை பெற்றுத் தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வாழ்நாள் சான்று அளிக்க வரும் ஓய்வூதியர்களுக்கு, ஓய்வூதிய புத்தகத்தில் கடைசியாக பெற்ற ஒய்வூதிய விபரங்களை முறையாக பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில், அமைப்புச் செயலாளர் அரியநாயகம், மாவட்ட செயலாளர் சண்முகம், பொருளாளர் சதாசிவம் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ