உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / காவிரி ஆற்றில் ஆண் சடலம் மீட்பு

காவிரி ஆற்றில் ஆண் சடலம் மீட்பு

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, கொக்கராயன்பேட்டை அடுத்த மொளசி காட்டுவலவு பகுதியில், காவிரி ஆற்றின் மையப்பகு-தியில் ஆண் சடலம் மிதப்பதாக, மொளசி போலீசாருக்கு, நேற்று மாலை தகவல் வந்தது. இதையடுத்து, போலீசார் சென்று, ஆற்றில் மிதந்து கொண்டிருந்த ஆண் சடலத்தை கைப்பற்றினர். இறந்தவருக்கு, 60 வயதிருக்கும். இறந்து ஒருவாரம் இருக்கும் என்பதால், உடல் அழுகி காணப்பட்டது. இறந்தவர் யார்? எந்த ஊர்? போன்ற விபரம் தெரியவில்லை. மொளசி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ