உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / நகராட்சி, மாநகராட்சி அலுவலர்கள் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை

நகராட்சி, மாநகராட்சி அலுவலர்கள் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை

கரூர்:தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஒருங்கிணைப்பு குழுவின், ஆலோசனை கூட்டம், மாநில ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம் தலைமையில், கரூரில் நடந்தது.நகராட்சி, மாநகராட்சி ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவித்து, கருவூலம் மூலம் ஊதியம், ஓய்வூதியம் வழங்க வேண்டும். பணியிட மாறுதல், பதவி உயர்வு மாறுதல்களை கலந்தாய்வு மூலம் மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும், 25ல் ஆர்ப்பாட்டம் நடத்துவது, வரும் செப்., 13 ல் சென்னையில் நகராட்சி இயக்குநரிடம் பெருந்திரள் முறையீடு செய்வது உள்ளிட்ட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சரவணன், பன்னீர் செல்வம், சத்தியமூர்த்தி, செய்தி தொடர்பாளர்கள் வெங்கிடுசாமி, தாமோதரன் உள்பட, பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை