உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பங்குனி உத்திர திருவிழாவையொட்டி பசுபதீஸ்வரர் கோவில் தேரோட்டம்

பங்குனி உத்திர திருவிழாவையொட்டி பசுபதீஸ்வரர் கோவில் தேரோட்டம்

கரூர்:கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் சார்பில், பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, நேற்று தேரோட்ட விழா நடந்தது.கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் கடந்த, 16 ல் கொடியேற்றத்துடன் பங்குனி உத்திர விழா தொடங்கியது. அதைதொடர்ந்து, பல்வேறு சிறப்பு வாகனங்களில், உற்சவர் திருவீதி உலா நடந்தது. பிறகு, சுவாமி, அம்பாள் எழுந்தருளல் நிகழ்ச்சி மற்றும் சிறப்பு அபிேஷகம், திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நேற்று காலை, 8:30 மணிக்கு தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள், தேரை வடம் பிடித்து இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று தீர்த்தவாரி, நாளை, 26 ல் ஆளும் பல்லாக்கு, வரும், 27 ல் ஊஞ்சல் உற்சவம், 28 ல் வெள்ளி வாகனத்தில், உற்சவர் திருவீதி உலா ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்