டூவீலர் மோதி விபத்து விசைத்தறி பணியாளர் பலி
மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம், ஏரிக்காடு பகுதியை சேர்ந்தவர் சின்னபையன், 68; விசைத்தறி தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் மாலை, 3:00 மணியளவில், மளிகை பொருட்கள் வாங்க, சேலம் - திருச்-செங்கோடு சாலையில் நடந்துசென்றுள்ளார்.அப்போது, சேலம் மாவட்டம், கண்டர்குலமாணிக்கம் பகு-தியை சேர்ந்த யோகேஷ்வரன், 20, என்பவர் ஓட்டிவந்த டூவீலர் சின்னபையன் மீது மோதியது. இதில் பலத்தகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மல்லசமுத்திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர். சின்னபையனுக்கு, சிவகாமி என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.