உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா

கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா

கரூர்: கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நடந்த, ஆவணி மாத, சனி பிரதோஷ விழாவில், நேற்று பக்தர்கள் பங்கேற்றனர்.பிரசித்தி பெற்ற, கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் உள்ள நந்தி சிலைக்கு, ஆவணி மாத பிரதோஷத்தையொட்டி நேற்று மாலை, 4:30 மணி முதல் பால், தயிர், பன் னீர், பஞ்சா-மிர்தம், சந்தனம், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட, 18 வகையான பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபி ேஷகம் நடந்-தது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். தொடர்ந்து மூலவர் நடராஜர் மற்றும் நந்தி சிலைக்கு நடந்த மஹா தீபாராத-னைக்கு பிறகு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.* நன்செய் புகழூர் பாகவல்லி அம்பிகை, சமேத மேகபாலீஸ்-வரர் கோவில், புன்னம் புன்னைவன நாதர் உடனுறை, புன்னை-வன நாயகி கோவில், திருகாடுதுறை மாதேஸ்வரன் கோவில், நத்-தமேடு ஈஸ்வரன் கோவில்களிலும், ஆவணி மாத சனி பிரதோ-ஷத்தையொட்டி, நந்தி சிலைகள், மூலவருக்கு சிறப்பு பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !